/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு
/
பிரதமர் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : அக் 10, 2025 12:36 AM
கோவை; இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை: இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
2025----26 ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
பெற்றோரின் ஆண்டு வருவாய் 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்.15 கடைசி. கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம்.
கூடுதல் விபரங்கள் அறிய தேசிய கல்வி உதவித்தொகை https://scholorships.gov.in இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.