/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
/
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : நவ 29, 2024 11:01 PM
பொள்ளாச்சி: 'தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்,' என, வடக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை வருமாறு:
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைச்சல் இழப்புகளை, புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதன் வாயிலாக தவிர்க்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய, விவசாயிகள், ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையை அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது பொதுச்சேவை மையம் அல்லது அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்., வாயிலாக செலுத்தி, பதிவு செய்து பயன்பெறலாம்.
வாழை (ராமபட்டிணம், பெரிய நெகமம், வடக்கு பிர்கா) ஒரு ெஹக்டேருக்கு, 4,839.22 ரூபாய் பிரிமியம் தொகையாக, வரும், 2025ம் ஆண்டு பிப்., 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தக்காளி (ராமபட்டிணம்) 3,692.65 ரூபாய் பிரிமியம் தொகையாக, வரும், 2025ம் ஆண்டு ஜன., 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மரவள்ளி (ராமபட்டிணம்) 4,248.40 ரூபாய் பிரிமியம் தொகையை, வரும், 2025ம் ஆண்டு பிப்., 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.