/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேலோ இந்தியா பல்கலை தடகளம்:என்.ஜி.பி., மாணவருக்கு வெள்ளி
/
கேலோ இந்தியா பல்கலை தடகளம்:என்.ஜி.பி., மாணவருக்கு வெள்ளி
கேலோ இந்தியா பல்கலை தடகளம்:என்.ஜி.பி., மாணவருக்கு வெள்ளி
கேலோ இந்தியா பல்கலை தடகளம்:என்.ஜி.பி., மாணவருக்கு வெள்ளி
ADDED : மார் 01, 2024 12:43 AM

கோவை;அசாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கேலோ இந்தியா பல்கலை விளையாட்டு போட்டியில் என்.ஜி.பி., கல்லுாரி மாணவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) இந்திய பல்கலை கூட்டமைப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்டவை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான தேசிய அளவில் கேலோ இந்தியா பல்கலை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன் தடளகப்போட்டிகள் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி தடகள ஸ்டேடியத்தில் பிப்., 25, 26 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் 100மீ., 200மீ., 400மீ., 800மீ., குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இதில் காளப்பட்டி ரோடு, டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பி.காம்., படிக்கும் பாலன் 'போல் வால்ட்' போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வெனறார்.
வெற்றி பெற்ற மாணவரை கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வித்துறையினர் பாராட்டினர்.

