sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள்

/

 சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள்

 சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள்

 சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள்


ADDED : நவ 27, 2025 02:25 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க, நொய்யல் ஆற்றங்கரையில், கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சூலூர் அடுத்த ராவத்தூர் பிரிவில் உள்ள, இன்ஜினியரிங் தொழிற்சாலை வளாகத்துக்குள் கடந்த, 12ம் தேதி இரவில் சிறுத்தை உலா வந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் அக்காட்சிகள் பதிவாகி இருந்தன. சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், நொய்யல் ஆற்றங்கரையில் ஆறு கேமராக்களை பொருத்தி, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சூலூர், நீலம்பூர் பகுதிகளில் சிறுத்தை உலா வருவதாக தகவல் பரவியது. பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளை காணவில்லை என்றால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us