sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ரோட்டில் சுற்றும் கால்நடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : ஜன 05, 2025 10:14 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் அதிக அளவில் ரோட்டில் நடமாடுகின்றன.

இதனால், வாகனங்களில் செல்பவர்களும், ரோட்டில் நடந்து செல்வோரும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் நடமாட்டத்தால் விபத்துக்குள்ளாகின்றனர்.

கால்நடைகளை ரோட்டில் நடமாட அனுமதிக்ககூடாது என, நகராட்சி நிர்வாகம் பல முறை எச்சரித்தும், கால்நடை உரிமையாளர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், இடநெருக்கடியால் மக்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்.

குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், நடுரோட்டில் நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கால்நடைகளும் அதிக அளவில் நடமாடுவதால், போதிய பாதுகாப்பிலாத நிலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கால்நடைகளின் உரிமையாளர்கள், அவற்றை சொந்த பாதுகாப்பில் வளர்க்க வேண்டும். ரோட்டில் கால்நடைகள் நடமாடினால், உடனடியாக பிடித்து, நகராட்சி வாகனத்தில் ஏற்றி, கோ சாலைக்கு அனுப்பிவைக்கப்படும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது. எச்சரிக்கையை மீறினால் போலீசில் புகார் செய்யப்பட்டு கைது செய்யப்படுவர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us