/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் உலா வரும் கால்நடைகள்; கட்டுப்படுத்தாததால் மக்கள் அவதி
/
ரோட்டில் உலா வரும் கால்நடைகள்; கட்டுப்படுத்தாததால் மக்கள் அவதி
ரோட்டில் உலா வரும் கால்நடைகள்; கட்டுப்படுத்தாததால் மக்கள் அவதி
ரோட்டில் உலா வரும் கால்நடைகள்; கட்டுப்படுத்தாததால் மக்கள் அவதி
ADDED : நவ 25, 2024 10:39 PM
வால்பாறை; வால்பாறையில், கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில் நிலவும் இடநெருக்கடியால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக ஆடு, மாடு, தெருநாய் போன்றவை நடுரோட்டில் உலா வருவதால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வானங்களில் செல்பவர்கள் கால்நடைகளின் நடமாட்டத்தால், அவதிக்குள்ளாகின்றனர். நகரில் நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்த, வால்பாறை நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகரில், ரோடு மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமீப காலமாக வால்பாறை நகரில் ரோட்டிலேயே கால்நடைகளின் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது.
இதனால், ரோட்டில் மக்கள் நிம்மதியாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரோட்டில் கேட்பாரற்று சுற்றும் கால்நடைகளை பிடித்து, காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். கால்நடைகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.