ADDED : ஆக 26, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், தேவங்கா நகரில் வசிப்பவர் பிரேமா,61. இவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர், பிரேமாவின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணையில், செயின் பறித்தவர் கோயில் மேடு, பாரதி நகரை சேர்ந்த ஸ்ரீநாத், 21, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து தங்க செயினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
