sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்

/

பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்

பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்

பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்


ADDED : டிச 21, 2024 11:13 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பருவ மழை இன்னும் முடியவில்லை எனவும், வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை, இம்முறை நன்றாக பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பொதுவாக, வடகிழக்குப் பருவமழை டிச., 20ம் தேதியையொட்டி, முடிவுக்கு வரும்.

தற்போது, கணிக்க முடியாத பருவ நிலை மாறுபாடுகள் நிகழ்கின்றன. சில சமயங்களில், வலுவான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகலாம். ஜன., 15ம் தேதிக்குப் பிறகு கூட, இதுபோன்று நிகழ்வதுண்டு.

இதுவரை இந்த பருவத்தில், 3 தாழ்வழுத்த நிலைகள் உருவாகின. இனியும் உருவாகலாம். எனவே, வடகிழக்கு பருவமழை நீடிக்கலாம். அதே சமயம், தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, வறண்ட வானிலை நிலவுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

வானம் மேகமூட்டமின்றி, தெளிவாக இருக்கும்போது, பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவு 10:00 மணி முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். வரும் நாட்களில் பனிப்பொழிவின் தாக்கம், அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, கொண்டைக்கடலை போன்ற, பனிக்காலத்தில் வளரும் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். பனிக்காலத்தில், பயிர்களை பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

எனவே, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனவரிக்குப் பிறகு, குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாம். நீர் இருப்பைப் பொறுத்து, பயிர்களைத் தேர்வு செய்யலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us