sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெங்கடேச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

/

வெங்கடேச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

வெங்கடேச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

வெங்கடேச பெருமாள் கோவிலில் தேரோட்டம்


ADDED : ஜன 31, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், 58ம் ஆண்டு தேர்த் திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது.

வரும் 3ம் தேதி இரவு நகர சோதனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம் நடக்கிறது. 4ம் தேதி காலை 6:00 மணிக்கு, பெருமாளுக்கு திருகாப்பு கட்டுதலும், காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது.

இரவு 8:00 மணிக்கு, பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள் பாலிக்கிறார்.

வருகிற பிப். 7ம் தேதி வரை, தினமும் காலை 7:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள் பாலிக்கிறார்.

8ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மன் அழைத்தலும், இதையடுத்து, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 9ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.

10ம் தேதி காலை 8:00 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.

அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.

வரும் 11ம் தேதி இரவு பரிவேட்டையும், வரும் 12ம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us