sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச திருமணத்துக்கு பதிவு செய்ய அறநிலையத்துறையினர் அழைப்பு

/

இலவச திருமணத்துக்கு பதிவு செய்ய அறநிலையத்துறையினர் அழைப்பு

இலவச திருமணத்துக்கு பதிவு செய்ய அறநிலையத்துறையினர் அழைப்பு

இலவச திருமணத்துக்கு பதிவு செய்ய அறநிலையத்துறையினர் அழைப்பு


ADDED : செப் 30, 2024 11:08 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : இலவச திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பதிவு செய்ய வேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் இலவச திருமணம் செய்யும் தம்பதியினருக்கு, திருக்கோவில் வாயிலாக, 50 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், 72 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்களாகவும், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும், முதல் திருமணம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இது குறித்து வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செயல்அலுவலர் கதிரவன் கூறியதாவது:

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருக்கோவில் வாயிலாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் (4 கிராம் தங்கம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை உள்ளிட்டவை) திருமண சீர்வரிசையாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், திருக்கோவில் அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும், 21ம் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் திருமணவிழாவில் அரசின் சார்பில் வழங்கப்படும் சீர்வரிசையை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us