sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இட வசதியின்றி அவதிப்படும் குழந்தைகள்; மூன்று அங்கன்வாடி மையங்களில் நெருக்கடி

/

இட வசதியின்றி அவதிப்படும் குழந்தைகள்; மூன்று அங்கன்வாடி மையங்களில் நெருக்கடி

இட வசதியின்றி அவதிப்படும் குழந்தைகள்; மூன்று அங்கன்வாடி மையங்களில் நெருக்கடி

இட வசதியின்றி அவதிப்படும் குழந்தைகள்; மூன்று அங்கன்வாடி மையங்களில் நெருக்கடி


ADDED : ஜன 30, 2025 07:30 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை, கோட்டைமேடு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களில், தலா மூன்று மையங்களைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிக்கப்படுவதால், இட வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

கோவை நகர் பகுதியில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் பழைய கட்டடத்தில் செயல்படுவதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம், எம்.எல்.ஏ., நிதி, தனியார் நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதி, மாநகராட்சி பொது நிதியை பயன்படுத்தி, புதிதாக கட்டடங்கள் கட்டி வருகிறது.

கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், எஸ்.எஸ்., கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, லட்சுமணன் வீதிக்குரிய நான்கு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தன.

இவை கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், மிகவும் சிதிலமடைந்துள்ளன. எலித்தொல்லை ஜாஸ்தியாக இருந்தது. இதையடுத்து, ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் பெருமாள் கோவில் வீதிக்கான இரு மையங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இம்மையங்களில் பராமரிக்கப்பட்ட குழந்தைகள், எஸ்.எஸ்., கோவில் வீதி மையம் மற்றும் லட்சுமணன் வீதி மையங்களில் சேர்த்து பராமரிக்கப்படுகின்றனர்.

ராமசாமி வீதி, பி.கே.செட்டி வீதி மையங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாததால், இவ்விரு மையங்களை சேர்ந்த குழந்தைகளும் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, ஒவ்வொரு மையத்திலும் மூன்று மையத்துக்கான குழந்தைகள் இருக்கின்றனர்.

இதில், லட்சுமணன் வீதி மையம் மட்டும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மையங்களையும் விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற, கோரிக்கை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக, மேயர் ரங்கநாயகியை, அங்கன்வாடி மைய பணியாளர்கள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us