sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விமானநிலையத்தில் சிக்கிய ரூ.35 லட்சம் சிகரெட், டிரோன்

/

விமானநிலையத்தில் சிக்கிய ரூ.35 லட்சம் சிகரெட், டிரோன்

விமானநிலையத்தில் சிக்கிய ரூ.35 லட்சம் சிகரெட், டிரோன்

விமானநிலையத்தில் சிக்கிய ரூ.35 லட்சம் சிகரெட், டிரோன்


ADDED : ஆக 18, 2025 09:37 PM

Google News

ADDED : ஆக 18, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஷார்ஜாவில் இருந்து ரூ.37.09 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், டிரோன்கள் கடத்திய ஐந்து பேரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

கோவை விமான நிலையத்துக்கு, ஷார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 3:45 மணிக்கு, ஏர் அரேபியா விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ஐந்து பயணிகள் தங்களது உடமைகளில், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், டிரோன்களை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்கள், திருவாரூரை சேர்ந்த அப்துல் ரஹீம், 40, துாத்துக்குடியை சேர்ந்த சையது சிராஜூதீன், 39, சிவகங்கையை சேர்ந்த ஜைனலாபூதீன், 35, திருச்சியை சேர்ந்த முகமது சித்திக், 35, சிவகங்கையை சேர்ந்த முகமது அப்சல், 33 எனத் தெரிந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.37.09 லட்சம் மதிப்பிலான, 856 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள், 36 டிரோன்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us