ADDED : செப் 03, 2026 02:49 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில், பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி வால்பாறை வந்த கோவை கலெக்டர் பவன்குமார், பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமை வகித்தார். முகாமில் டாக்டர் குழுவினர் கலந்து கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து, மாத்திரைகள் வழங்கினார்.
