/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போட்டி தேர்வுக்கு பயிற்றுநர் தேவை ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 ஊதியம்
போட்டி தேர்வுக்கு பயிற்றுநர் தேவை ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 ஊதியம்
போட்டி தேர்வுக்கு பயிற்றுநர் தேவை ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 ஊதியம்
ADDED : ஆக 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கோவை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ, எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், திறனறிவு மற்றும் காரணவியல் உள்ளிட்ட பாடங்களை கையாள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 மதிப்பூதியம் வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய ரெஸ்யூமை, துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், ஜி.என். மில்ஸ், கோவை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ செப்., 7க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422–2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
