/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய் ஏல விற்பனை; விவசாயிகளுக்கு அழைப்பு
/
தேங்காய் ஏல விற்பனை; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 28, 2025 11:27 PM
அன்னுார்; கோயமுத்துார் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை :
கோயம்புத்துார் விற்பனை குழு சார்பில், அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் விவசாய விளை பொருட்கள் ஏலம் இன்று (29ம் தேதி) துவங்குகிறது.அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் (இ - நாம்) இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஏலம் நடைபெறும். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விவசாயிகள் தங்களது வங்கி பாஸ் புத்தகம்,ஆதார் அட்டை நகல்களை கொண்டுவர வேண்டும்.
விளை பொருட்களை தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். விவரங்களுக்கு 99423 28959 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.