/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களப்பணியில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள்
/
களப்பணியில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஜன 27, 2026 05:06 AM
கோவில்பாளையம்: அக்ரஹார சாமக்குளம் ஏரியில், கல்லூரி மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.
கோவில்பாளையம் அருகே அக்ரஹார சாம குளத்தில் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி உள்ளது. இங்கு சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் ஏரியில் களப்பணியில் ஈடுபட்டனர்.
மரக்கன்றுகளை பராமரித்தல், மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு களப்பணியில் ஈடுபட்டனர்.
குளத்தில் உள்ள அரிய பறவைகளை கண்டு மகிழ்ந்தனர். குளத்தையொட்டி உள்ள கிணறுகளில் மேல் மட்டம் வரை நீர் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர்.
இதற்கு காரணமான கவுசிகா நீர் கரங்கள், அன்பு அறம் நீர் அமைப்பு மற்றும் அக்ரஹார சாம குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினரின் பணிகளுக்கு, வாழ்த்து தெரிவித் தனர்.

