sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு ஆணையத் தலைவர் பெருமிதம் 

/

சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு ஆணையத் தலைவர் பெருமிதம் 

சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு ஆணையத் தலைவர் பெருமிதம் 

சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு ஆணையத் தலைவர் பெருமிதம் 


ADDED : நவ 14, 2024 05:17 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சிறுபான்மையினர் பிரச் னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண்பதாக சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருண் கூறினார்.

சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருண் தலைமையிலான அனைத்து துறை அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் கல்லறை தோட்டம், பள்ளிவாசல் அமைப்பதற்கு அனுமதி பெறுவதில் பல்வேறு மனுக்கள் விசாரணை என்ற பெயரில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தன.

சிறுபான்மை மக்களுக்கான பள்ளி, கல்லுாரி அனுமதி பெறுவது, அதில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் அனுமதி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தல பாதுகாப்பு, தடையில்லா சான்று வழங்குவது, சிறுபான்மை நிறுவனத்துக்கான அங்கீகாரம் தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

குறைகளையும் வேண்டுகோள்களையும் கேட்டோம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு அவை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன. 60 முதல் 70 சதவீத கோரிக்கைகளும் பிரச்னைகளும் உடனுக்குடன் நிறைவு செய்யப்பட்டன.

கிறிஸ்தவ ஆலயங்கள் பள்ளி வாசல்களில் இறைவழிபாடு மேற்கொள்வதற்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று கோரி மனுக்கள் வந்தன. அதன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us