sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

/

வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

வேலையில் சேர்ந்த சில நாட்களில் மாயம்; கட்டுப்பாடுகளை விதிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 28, 2025 05:52 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வோர் பலர், பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே வெளியேறுவது அதிகரித்துள்ளது.

தனியார் துறையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், மாதத்தில், மூன்றாவது வெள்ளியன்று, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான முகாம் நடத்தப்படுகிறது. பின், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த 23ம் தேதி, கோவை ரத்தினம் கல்லுாரியில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் பணி ஆணை வழங்கினார்.

இதற்கு பிறகுதான் பிரச்னையே. சில தனியார் நிறுவனத்தினர், 'நிறுவனத்தில் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு வாரம் மட்டுமே பணிக்கு வந்தார். மீதமுள்ளவர்கள், அடுத்த வாரம் முதல் வரமாட்டோம் என்று தெரிவித்து விட்டனர். 'வீட்டில் இருந்து துாரமாக இருக்கிறது, வேலை நேரம் அதிகமாக இருக்கிறது' போன்ற பல காரணங்களை, வேலை பெற்றவர்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

சில நாட்கள் கழித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபர்களை, போனில் தொடர்பு கொள்ளும் போது, பலர் அழைப்பை ஏற்பதில்லை என்கின்றனர்.

இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, பணிக்கு சேர்வோர் அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட நாட்களில் வெளியேறுவோரும் அதிகம். எனவே, பணியில் சேர்ந்த பின், குறிப்பிட்ட மாதங்களுக்காவது நீடிக்க வேண்டும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகளுடன், இதுபோன்ற முகாம்களை நடத்தலாம் என்றும், தனியார் நிறுவனங்கள் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணை பெற்றும் ஆளை காணோம்

கடந்த மார்ச் இறுதியில், கோவையில் நடத்தப்பட்ட மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில், 7852 பேர் பங்கேற்றதில், 1,154 பேர் பணி ஆணை பெற்றனர். மூன்று மாத இடைவெளியில், 100 முதல் 200 பேர் கூட பணியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மூன்றாவது வெள்ளிக்கிழமை, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் சிறிய அளவிலான முகாமில், 300 முதல் 400 பேர் வரை பதிவு செய்வதில், 50க்கு குறைவானவர்களே பணி வாய்ப்பு பெறுகின்றனர். குறைந்தபட்சம் இரண்டு மாத இடைவெளியில், இவர்களில் 10 முதல் 15 பேர் வரை மட்டுமே பணியில் இருப்பதாக, தனியார் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us