/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
/
போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
ADDED : பிப் 15, 2026 06:07 AM
அன்னூர்: போட்டித் தேர்வு மற்றும் உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, அன்னூரில் இன்று (15ம் தேதி) நடைபெறுகிறது.
அன்னூர், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கமலம் ஹாலில், நடக்கும் நிகழ்ச்சி இன்று காலை 10:00 மணிக்கு விழா துவங்குகிறது.
எழுத்தாளர்கள் பாமரன், லட்சுமணன் ஓடியன் ஆகியோர் பேசுகின்றனர். சாவித்திரிபாய், ஜோதிராவ் பூலே 'இந்திய பெண் கல்வியின் தந்தையும் தாயும்' என்னும் புத்தகத்தை, எழுத்தாளர் ஜெயச்சந்திரன் வெளியிட்டு பேசுகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து அரசு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று பயன்பெற, கல்வி மைய நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

