sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி செயலருக்கு நிபந்தனை ஜாமின்

/

ஊராட்சி செயலருக்கு நிபந்தனை ஜாமின்

ஊராட்சி செயலருக்கு நிபந்தனை ஜாமின்

ஊராட்சி செயலருக்கு நிபந்தனை ஜாமின்


ADDED : செப் 30, 2025 11:17 PM

Google News

ADDED : செப் 30, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கோட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம் ராஜ். இவர், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனையை வரன்முறைபடுத்த, கொண்டையம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

உத்தரவு வழங்க, ஊராட்சி செயலர் முத்துச்சாமி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் விக்ரம் ராஜ் புகார் செய்தார்.

அவர்களது அறிவுரைப்படி, செப். 11ல் ரசாயனம் கலந்த, 10 ஆயிரம் ரூபாயை, முத்துச்சாமியிடம் விக்ரம் ராஜ் கொடுத்தார்.

அதை வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊராட்சி செயலர் பதவியில் இருந்து, அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஜாமின் கோரி, முத்துச்சாமி தாக்கல் செய்த மனு, கோவை கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமின் தரப்பட்டது.

ஜாமினில் வெளியே வந்த முத்துச்சாமி, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் நேற்று கையெழுத் திட்டார்.






      Dinamalar
      Follow us