sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டு கொள்ளாத போலீசார்

/

சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டு கொள்ளாத போலீசார்

சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டு கொள்ளாத போலீசார்

சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டு கொள்ளாத போலீசார்


ADDED : அக் 07, 2024 12:34 AM

Google News

ADDED : அக் 07, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து போஸ்ட் ஆபீஸ் வரையுள்ள, ஒரு கி.மீ., துாரத்துக்கு ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இது தவிர சுற்றுலா வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

சமீப காலமாக, சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் நடுரோட்டில் நிறுத்தி, பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஏற்கனவே, போக்குவரத்து நெரிசல் பிரச்னை நிலவும் வால்பாறையில், சரக்கு வாகனங்களால் மேலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் நிறுத்த வசதியாக, நகராட்சி சார்பில் தனி 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us