sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை

/

சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை

சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை

சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை


ADDED : மார் 01, 2024 01:19 AM

Google News

ADDED : மார் 01, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் சங்கர நாராயணன். இவர் பணியாற்றிய காலத்தில், 1995, ஏப்., முதல் டிச., 2000 வரையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில், சங்கர நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில், 12.57 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, 2002, மார்ச் 4ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு,72, ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us