/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை
/
சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் மாநகராட்சி பொறியாளருக்கு சிறை
ADDED : மார் 01, 2024 01:19 AM
கோவை;கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் சங்கர நாராயணன். இவர் பணியாற்றிய காலத்தில், 1995, ஏப்., முதல் டிச., 2000 வரையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில், சங்கர நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில், 12.57 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, 2002, மார்ச் 4ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு,72, ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

