/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி திறந்தது ஆதரவற்றோர் விடுதி
/
மாநகராட்சி திறந்தது ஆதரவற்றோர் விடுதி
UPDATED : பிப் 25, 2026 07:13 AM
ADDED : பிப் 25, 2026 07:12 AM

கோவை: மாநகராட்சி சார்பில் பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் ரூ.2.09 கோடியில் நகர்ப்புற வீடற்ற ஆதரவற்றோர் தங்கும் விடுதி, மதுசூதனன் நகரில் பொறியாளர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் வரி வசூல் மையம், கொடிசியா சாலையில் இரும்பு பெட்டி வடிவிலான கடைகள், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வகம், கூடுதல் வகுப்பறை, சேரன் மாநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள் என, ரூ.5.60 கோடியிலான பணிகளை எம்.பி. ராஜ்குமார் திறந்து வைத்தார்.
முன்னதாக, விளாங்குறிச்சி ரோடு ஜீவா நகர் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியை அவர் துவக்கி வைத்தார். கிழக்கு மண்டலத்தில் 3,879 கி.மீ. நீளத்துக்கு 10 சாலை, வடக்கு மண்டலத்தில் 3,384 கி.மீ. நீளத்துக்கு 5 சாலை, மேற்கு மண்டலத்தில் 2,056 கி.மீ. நீளத்துக்கு 18 சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.
மேயர் ரங்கநாயகி, அதிகாரிகள் பங்கேற்றனர்.

