/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : ஆக 18, 2025 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் செவ்வாய் தோறும் நடக்கிறது. மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் சார்ந்த மனுக்கள் பெறப்படும்.
இந்நிலையில், மத்திய மண்டலம், 47வது வார்டுக்கு உட்பட்ட ரத்தினபுரி, லாலா மஹால் திருமண மண்டபத்திலும், வடக்கு மண்டலம், 12வது வார்டு, கணபதி, மணியகாரம்பாளையம் ஸ்ரீ தேவ் மஹால் திருமண மண்டபத்திலும் இன்று, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடப்பதால், குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.