/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாட ி -வினா போட்டி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாட ி -வினா போட்டி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர்-பட்டம்' மெகா வினாட ி -வினா போட்டி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர்-பட்டம்' மெகா வினாட ி -வினா போட்டி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 22, 2024 11:18 PM

கோவை: பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை ஊக்குவித்து, கணித, அறிவியல் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களின் பொது அறிவுத்திறனை ஊக்குவிக்க கடந்த, 2018 முதல் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.
கடந்தாண்டு வரை, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தாண்டு மாநகராட்சி பள்ளிகளிலும் 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 65 பள்ளிகளுக்கான போட்டியை,'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழானது, கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து நடத்துகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த, வினாடி-வினா போட்டியில், 96 மாணவர்கள் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், 'டி' அணியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவி சஞ்ஜனா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி பானுபிரியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் ராஜூ, ஆசிரியர்கள் முறையே சந்தான பொன்னம்பலம் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் பரிசளித்தனர்.
இதேபோல், மேட்டூர் போத்தனுார், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நேற்று நடந்த வினாடி-வினா போட்டியில், 146 மாணவர்கள் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், 'எப்' அணியை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர் அப்துல்நபீஸ், எட்டாம் வகுப்பு மாணவி அஸ்மா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிரியர்கள் சுமித்ரா, ஞானகுமாரி, பூங்கொடி, கன்னிகா, கனிமொழி, கோமதி, திவ்யபிரபா ஆகியோர், மாணவர்களுக்கு பரிசளித்தனர்.