sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரையிறுதியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

/

 அரையிறுதியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

 அரையிறுதியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

 அரையிறுதியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்


ADDED : டிச 05, 2025 07:17 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா போட்டியில் பங்கேற்ற, கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

பொது அறிவு; கற்றல் சார்ந்த சிந்தனை; பாடப்பகுதிகளில் உள்ளார்ந்த புரிதல்; படிப்பின் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்க இத்தகைய வினாடி - வினா போட்டியை 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருகிறது.

கோவில்மேடு உயர்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எச்' அணியை சேர்ந்த ரித்தீஷ், லோகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவர்களுடன், 'இ' அணியின் சுகந்தன், வித்யா லோகேஷ்வரி; 'டி' அணியின் மனோ பிரியா, கந்தசாமி; 'எப்' அணியின் திஜோ ஸ்ரீ, தேஜ வர்ஷினி; 'பி' அணியின் விஜயஸ்ரீ, முத்து ஜெயா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை கீதா சான்றிதழ்களை வழங்கினார்.

இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 66 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'இ' அணியை சேர்ந்த தீபன், லிவினிஷ் ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவர்களுடன், 'எச்' அணியின் சாம் ஜோஷ்வா, ரூபக்குமார் ; 'ஜி' அணியின் சூரியவேல், கருப்புசாமி; 'ஏ' அணியின் முத்துச்செல்வம், பத்மேஷ்; 'எப்' அணியின் எபினேசர், தருண் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை ஆனந்தலட்சுமி சான்றிதழ்களை வழங்கினார்.

பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 40 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'பி' அணியை சேர்ந்த முகிந்தரா காவியா, மதுமிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவர்களுடன், 'எப்' அணியின் சஞ்சனா சிவா, ஹர்ஷினி; 'டி' அணியின் பாலகிருஷ்ணன்,சுனில் குமார்; 'எச்' அணியின் தேவ தர்ஷினி, சதீஷ்வரன்; 'இ' அணியின் அனுஷியா, லிடியா நான்லி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை உமா சான்றிதழ்களை வழங்கினார்.

அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'பி' அணியை சேர்ந்த முகமது பாசில், முகமது ரைஹான் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவர்களுடன், 'எச்' அணியின் ஸ்ரீராம், முகமது தவ்பிக்; 'இ' அணி யின் ஷாஹியோ, ஆசில்; 'எப்' அணியின் முகமது இஹ்சான், ஷாஹின்; 'டி' அணியின் ஆதவன், முகமது சுஹைல் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் வேலுமணி சான்றிதழ்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us