sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிரெடிட் கார்டு சேவையில்  செய்த குறைபாடு; இழப்பீட்டுக்கு உத்தரவு 

/

கிரெடிட் கார்டு சேவையில்  செய்த குறைபாடு; இழப்பீட்டுக்கு உத்தரவு 

கிரெடிட் கார்டு சேவையில்  செய்த குறைபாடு; இழப்பீட்டுக்கு உத்தரவு 

கிரெடிட் கார்டு சேவையில்  செய்த குறைபாடு; இழப்பீட்டுக்கு உத்தரவு 


ADDED : டிச 18, 2024 10:50 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆர்.பி.எல்., வங்கி கிரெடிட் கார்டு சேவையில் குறைபாடு செய்துள்ளதால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை, தெலுங்குபாளையத்தை சேர்ந்த மெக்ஜனா என்பவர், அவினாசி ரோட்டிலுள்ள 'ஆர்.பி.எல்., பேங்கில்' கிரெடிட் கார்டு வாங்கினார்.

இந்த கார்டை பயன்படுத்தி வந்த நிலையில், எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் கடந்த 2022, நவ., 25 ல், அவரது கார்டிலிருந்து, 677 ரூபாய் பிடித்தம் செய்தனர்.

இது பற்றி கேட்ட போது, சில தொழில்நுட்ப கோளாறால் பணம் தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்டதாகவும், பணத்தை ஒரு சில வாரத்தில் திருப்பி தருவதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறிய படி பணத்தை தரவில்லை.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார், விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us