/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
55 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிரிக்கெட் கிளப் வீரர்கள்
/
55 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிரிக்கெட் கிளப் வீரர்கள்
55 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிரிக்கெட் கிளப் வீரர்கள்
55 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிரிக்கெட் கிளப் வீரர்கள்
ADDED : ஜூன் 16, 2025 11:31 PM

கோவை; கோவையில் 1970களில் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ராம்நகர் கிரிக்கெட் கிளப்பில் இணைந்து, கிரிக்கெட் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள், 55 ஆண்டுகளுக்கு பிறகு, ஹெரிடேஜ் இன் ஓட்டலில் சந்தித்துக்கொண்டனர்.
இந்த இரண்டு உள்ளூர் கிளப்புகளின், முன்னாள் வீரர்கள் மைதானங்களில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியது, வியத்தகு ரன்-அவுட்கள், மறக்க முடியாத சிக்சர்கள், போட்டியை மாற்றியமைத்த மந்திரங்கள் மற்றும் கோவையில், 1970களின் கிளப் கிரிக்கெட்டின் மறக்க முடியாத நட்பின் நினைவுகளை, பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.
காலமான சக வீரர்களை நினைவுகூரும் வகையில், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றனர்.