/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரைம் செய்திகள்: மொபைல் போன் பறித்த 3 பேர் கைது
/
கிரைம் செய்திகள்: மொபைல் போன் பறித்த 3 பேர் கைது
ADDED : அக் 26, 2025 10:36 PM
மேலும் ஒருவர் கைது கோவை அருகே காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட சஞ்சய் குமார், 23, கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன், 21, ஜாமினில் விடுதலையானார்.
அதன் பின்னர், கடந்த, 13ம் தேதி அவரது நண்பர் விக்னேஸ்வரனுடன் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு சென்று திரும்பினார்.
அப்போது கமலக்கண்ணனால் கொலை செய்யப்பட்ட சஞ்சய் குமாரின் உறவினர்கள் பழி தீர்க்கும் எண்ணத்தில் மத்தம்பாளையம் பேக்கரி அருகே கமலக்கண்ணனை தாக்கி, பலத்த காயம் ஏற்படுத்தினர்.
இவ்வழக்கில் ஏற்கனவே அரவிந்தன்,24, பிரகாஷ்,25, கிருஷ்ணராஜ்,45, சுந்தர்ராஜ்,51, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த சபீர் நேற்று பெரியநாயக்கன்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மொபைல் போன் பறித்த 3 பேர் கைது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிம்சாம், 20. இவர் கூடலூர் கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி நகர், மணி மேன்சனில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் நண்பர்கள் காட்சன், ஆதர்ஷ், ஆல்பின், அர்ஜுன், ஸ்ரீஜித், அபிநந்த், ஜோஸ்வா, அபினவ் ஆகியோர் தங்கி கல்லூரி சென்று வருகின்றனர்.
கடந்த, 10ம் தேதி நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்த போது, சுபாஷ் கண்ணன் மற்றும் அடையாளம் தெரியக்கூடிய ஐந்து நபர்கள் ரூமுக்குள் அத்துமீறி நுழைந்து, சிம்சாம் கழுத்தின் மீது கத்தியை வைத்து மிரட்டி, அவருடன் இருந்த அவரது நண்பர்கள் வைத்திருந்த ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஜிபே நம்பரின் பாஸ்வேர்டுகளை மிரட்டி பறித்து சென்றனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் போன்களை கொள்ளையடித்துச் சென்ற சிவகங்கை சுபாஷ் கண்ணன்,19, மானாமதுரை பிரவீன் சந்தோஷ்,19, மகேஸ்,19, ஆகியோரை கைது செய்தனர்.
ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 3 இளம் சிறார்களை கைது செய்து, இளம் சிறார் நீதி குழுமத்தில் ஒப்படைத்தனர்.

