ADDED : செப் 05, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்சார்பில், ‘விளைவு அடிப்படையிலான கல்வி’ கட்டமைப்பின் கீழ் பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்த பயிலரங்கம் நடந்தது.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் பயிற்சி அளித்தார். மாணவர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். பல்கலை பதிவாளர் ராஜவேல், 39 துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர்.
