sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சைபர் கிரைம் மோசடியால் ரூ .94 கோடி போச்சு! கடந்த ஓராண்டில் இழப்பு

/

சைபர் கிரைம் மோசடியால் ரூ .94 கோடி போச்சு! கடந்த ஓராண்டில் இழப்பு

சைபர் கிரைம் மோசடியால் ரூ .94 கோடி போச்சு! கடந்த ஓராண்டில் இழப்பு

சைபர் கிரைம் மோசடியால் ரூ .94 கோடி போச்சு! கடந்த ஓராண்டில் இழப்பு


ADDED : ஜன 06, 2025 02:36 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில், கோவை மக்கள் சுமார், ரூ. 94 கோடியை இழந்துள்ளனர். சைபர் கிரைம் மோசடிகள் குறித்து, பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே, பாடுபட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்றமுடியும் என்கின்றனர் போலீசார்.

சில வருடங்களுக்கு முன்பு வரை பிக் பாக்கெட், கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தன. அதில் குற்றம் செய்தவர்களை, போலீசார் புலன் விசாரணை செய்து கண்டுபிடித்தனர். தற்போது, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அதற்கு ஏற்ப ஆன்லைன் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதுபோன்ற இணைய வழி மோசடியில், ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்று தருவது, போலீசாருக்கு சவாலாக உள்ளது. குற்றம் செய்யும் நபர்கள் யார் என்பதே தெரியாமல் இருப்பதும், குற்றம் செய்யும் நபர்கள் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்தவர்களாக இருப்பதும், போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தினசரி சுமார், 30 - 50 புகார்கள் வரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறது. இதில் பெரும்பாலானவை, பண மோசடி தொடர்பான புகார்கள். இதற்கு பேராசையும், விழிப்புணர்வு இல்லாததும் தான் முக்கிய காரணம் என்கின்றனர் போலீசார்.

அரசு தரப்பில் மொபைல் போன் வாயிலாக, ஒவ்வொரு முறை 'கால்' செய்யும் போதும், சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து அறிவிக்கப்படுகிறது. எனினும், பொது மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், தினசரி பலர் தங்களின் கடின உழைப்பால் சேர்த்த பணத்தை இழக்கின்றனர்.

ரூ.94 கோடி இழப்பு


2024ம் ஆண்டு, கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில், 8,254 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 5,945 பண மோசடி புகார்கள். 300 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 93 கோடியே 95 லட்சத்து, 56 ஆயிரத்து, 305 இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், ரூ. 11 கோடியே 16 லட்சத்து, 24 ஆயிரத்து 523 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ. 49 கோடியே, 89 லட்சத்து, 72 ஆயிரத்து, 508 முடக்கப்பட்டுள்ளது. 50 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சில நாட்களுக்கு முன் ஒரு கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், 'பெட்எக்ஸ்' மோசடி குறித்து கேட்டபோது, அங்கிருந்த ஒருவருக்கு கூட அதைப்பற்றி தெரியவில்லை. இது மோசடி நபர்களுக்கு சாதகமாக உள்ளது. பணத்தை இழந்த பின் நடவடிக்கை எடுப்பது போலீசாரின் பணி. ஆனால், பணத்தை இழக்காமல் இருக்க மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் முடியும்' என்றார்.

உஷாரா இல்லேன்னா இப்படித்தான்!



மக்களே...உஷார்

சி.பி.ஐ., அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் போல் பேசி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி, வங்கி கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும், மோசடி நபர்கள் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என, மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம், தற்போது அதிகம் நடக்கிறது. இதனால் புதிய எண்களில் இருந்து, வாட்ஸ் ஆப் அழைப்பு, வீடியோ அழைப்பு ஏதேனும் வந்தால், உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.








      Dinamalar
      Follow us