sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி

/

 நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி

 நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி

 நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால் 'டான்டீ' தொழிலாளர்கள் மகிழ்ச்சி


ADDED : பிப் 16, 2026 05:54 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத்தோட்ட கழகத்தில், டான்டீ தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்பட்டது.

சின்கோனா(டான்டீ) அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கோட்ட மேலாளர் வடிவேல் தலைமை வகித்தார். விழாவில், தி.மு.க., நகரச்செயலாளர் சுதாகர், கவுன்சிலர் உமாமகேஸ்வரி ஆகியோர், தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிலுவைத்தொகையினை வழங்கினர்.

டான்டீ அதிகாரிகள் கூறுகையில், 'சின்கோனா டான்டீ தேயிலை தோட்டத்தில் கடந்த, 2022 முதல், 2025 வரையிலான காலகட்டத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்பட்டது.

மொத்தம், 73 அதிகாரிகள், 904 தொழிலாளர்கள் உட்பட, 977 பேருக்கு, ரூ.5 கோடியே, 82 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பிலான தொகை வழங்கப்பட்டது' என்றனர்.

டான்டீ தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us