sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அனுமதியற்ற கட்டடங்களை இடிப்பதற்கு... அரசாணை ரெடி; ஆரம்பமாகட்டும் அதிரடி! கோவையில் குழு அமைப்பதில் ஏன் தாமதம்?

/

அனுமதியற்ற கட்டடங்களை இடிப்பதற்கு... அரசாணை ரெடி; ஆரம்பமாகட்டும் அதிரடி! கோவையில் குழு அமைப்பதில் ஏன் தாமதம்?

அனுமதியற்ற கட்டடங்களை இடிப்பதற்கு... அரசாணை ரெடி; ஆரம்பமாகட்டும் அதிரடி! கோவையில் குழு அமைப்பதில் ஏன் தாமதம்?

அனுமதியற்ற கட்டடங்களை இடிப்பதற்கு... அரசாணை ரெடி; ஆரம்பமாகட்டும் அதிரடி! கோவையில் குழு அமைப்பதில் ஏன் தாமதம்?


ADDED : மே 13, 2024 01:07 AM

Google News

ADDED : மே 13, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர்-

ஐகோர்ட் உத்தரவின்படி, அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களை இடிப்பதற்கு உயர்மட்டக்குழு அமைப்பதற்கு, அரசாணை வெளியிட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் கோவையில் இன்னும் குழுவே அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக நடப்பதால், கட்டுமானங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆனால் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி பெறுவதற்கு, பெரும் காலதாமதம் ஏற்படுவதோடு, லஞ்சமும் பெரிய அளவில் கொடுக்க வேண்டியிருப்பதால், பலரும் அனுமதி வாங்காமலே கட்டடம் கட்டி விடுகின்றனர். பலர் வாங்கிய அனுமதிக்கு மாறாக, விதிகளை மீறி, கட்டடங்களைக் கட்டுகின்றனர்.

இதனால் நகர்ப்புறங்களில் 'பார்க்கிங்', விபத்து ஏற்பட்டால் உயிர்களைக் காப்பதில் ஏற்படும் சிக்கல் என, பல விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அது மட்டுமின்றி, அரசு மற்றும் உள்ளாட்சிகளுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டுவதால், அதற்கும் அனுமதி பெறப்படுவதில்லை. இதுகுறித்த ஒரு வழக்கில், ஐகோர்ட் மதுரை கிளை கடுமையான சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

குழு நியமிக்க உத்தரவு


அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டடங்களைக் கண்டறிந்து, அவற்றை இடிப்பதற்கு மாவட்டம்தோறும் உயர் மட்டக்குழுவை அமைக்க வேண்டுமென்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடந்த மார்ச் 1ல் அரசாணை (எண்: 15) வெளியிட்டது. இந்தக் குழுவில் எட்டுப் பேர் நியமிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தது.

கலெக்டர் தலைவராகவும், மாநகராட்சி கமிஷனர் கன்வீனர் ஆகவும் உள்ள இக்குழுவில், போலீஸ் கமிஷனர் அல்லது எஸ்.பி., நகர ஊரமைப்பு துணை இயக்குனர், நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர், வருவாய் கோட்டாட்சியர், தனி அலுவலராக வருவாய்த்துறை துணை கலெக்டர், மின் வாரிய செயற்பொறியாளர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

எந்தெந்த கட்டடங்கள்


பட்டா நிலங்கள், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள அனுமதியற்ற கட்டடங்கள், வீடுக்கு அனுமதி பெற்று வணிகக் கட்டடமாக மாற்றப்பட்டவை, பெற்ற அனுமதிக்கு மாறாக விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள வணிகக் கட்டடங்கள் மற்றும் பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் என, நான்கு விதமான கட்டடங்கள் அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குழு மாதம் ஒரு முறை கூடி, அனுமதியற்ற கட்டடங்கள் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென்று அரசாணையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது; அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்வது, நோட்டீஸ் கொடுப்பது, சீல் வைப்பது போன்றவை இந்த குழுவின் பணிகளாக இருக்க வேண்டுமென்றும், அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசாணைக்கு மதிப்பில்லை


ஆனால் இந்த அரசாணை வெளியான பின்பும், கோவையில் இந்த குழு இப்போது வரை அமைக்கப்படவில்லை; தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதே இதற்குக் காரணமென்று, அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

குழு அமைத்து, இப்போதே கள ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே, தேர்தல் முடிவுக்குப் பின், நடவடிக்கைகளில் இறங்க முடியும். இப்போது வரை குழுவே அமைக்கப்படவில்லை என்பது, அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், இங்குள்ள அதிகாரிகளுக்கு அக்கறையில்லையோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.






      Dinamalar
      Follow us