sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெயின்ட் அடித்ததில் குறைபாடு; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

/

பெயின்ட் அடித்ததில் குறைபாடு; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

பெயின்ட் அடித்ததில் குறைபாடு; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

பெயின்ட் அடித்ததில் குறைபாடு; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : பிப் 20, 2025 11:34 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வீட்டுக்கு பெயின்ட் அடித்ததில் சேவை குறைபாடு செய்ததால், வீட்டு உரிமையாளருக்கு,50,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை, மதுக்கரை மார்க்கெட் , லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் வீட்டுக்கு பெயின்ட் அடிப்பதற்காக, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைன் வாயிலாக ஆர்டர் கொடுத்தார். குளத்துப்பாளையம் ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து பெயின்ட் அடிப்பதற்கு ஆட்கள் அனுப்பினர். பணியாட்கள் வர்ணம் அடித்த போது, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், காஸ் ஸ்டவ் அடுப்பு ஆகிய பொருட்களில் பெயின்ட் சிதறியது. இதனால் சம்பத்குமார் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா பிறப்பித்த உத்தரவில், ''பெயின்ட் அடித்த தொழிலாளர்கள் கவனகுறைவாக செயல்பட்டதால், பொருட்களில் பெயின்ட் சிதறி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

''இதனால் எதிர்மனுதாரர்கள் சேர்ந்து, மனுதாரருக்கு, செலவு தொகையில், 17,500 ரூபாய் திருப்பி கொடுப்பதுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us