sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை

/

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை


ADDED : மே 12, 2025 12:19 AM

Google News

ADDED : மே 12, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும் என, வியாபாரிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமுகையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், வணிகர் தின குடும்ப விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் இனாயத்துல்லா தலைமை வகித்தார். செயலாளர் தாமஸ் அருள்ராஜ் வரவேற்றார். சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் நாகராஜன், வியாபாரிகள் சங்க பொருளாளர் ராமசாமி, துணைத்தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வியாபாரிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

கூட்டத்தில், சிறுமுகைக்கு விளாமரத்துாரிலிருந்து குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும். சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். சிறுமுகை நகரில், 24 மணி நேரமும் மும்முனை மின்சார இணைப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணை பொது செயலாளர் ஹபிபுல்லா உள்பட பலர் பேசினர். கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us