/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை
/
அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : செப் 25, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மலுமிச்சம்பட்டி ஜெ.ஜெ. நகரில் உள்ள ஊராட்சி பள்ளியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு மேல்நிலை பாடப்பிரிவுகள் இல்லை.
மேல்நிலை பாடப்பிரிவுகளுக்காக வெகு துாரம் உள்ள வேறொரு பள்ளிக்கு மாணவ - மாணவியர் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. ஜெ.ஜெ. நகர் அரசு பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.