/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் தீப்பந்த சேவை
/
அரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் தீப்பந்த சேவை
ADDED : மார் 04, 2026 05:15 AM

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், தேர் திருவிழாவை முன்னிட்டு நடந்த தீப்பந்த சேவையில், பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் நிலையை அடைந்தவுடன், பக்தர்கள் கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, நீர் எடுத்து வந்து, கோவிலில் சேர்த்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேர்த் திருவிழாவில் முக்கிய விழாவான தீப்பந்த சேவை நேற்று நடத்தப்பட்டது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தீப்பந்தங்களை ஏந்தி வந்த பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. சந்திர கிரகணம் முடிந்து, கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின், இரவு ஒன்பது மணிக்கு மேல் ஏராளமான கிராமங்களில் இருந்து பக்தர்கள், தீ பந்தங்களை எடுத்து வந்து நான்கு ரத வீதிகளில் ஆடிச் சென்று, கோவிலில் நேர்த்தி கடன் செலுத்தினர்.

