/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணி கிருத்திகை பூஜை பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
ஆவணி கிருத்திகை பூஜை பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : செப் 12, 2025 09:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை, ; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி மாதம் கிருத்திகை நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின், 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை நடந்தது.