/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் -- பட்டம்' இதழ் சார்பில் வினாடி-- வினா பாரதி கலா பவன் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் -- பட்டம்' இதழ் சார்பில் வினாடி-- வினா பாரதி கலா பவன் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் -- பட்டம்' இதழ் சார்பில் வினாடி-- வினா பாரதி கலா பவன் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் -- பட்டம்' இதழ் சார்பில் வினாடி-- வினா பாரதி கலா பவன் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 17, 2025 06:28 AM

கிணத்துக்கடவு: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் சார்பில், 'பதில் சொல் பரிசை வெல்' வினாடி - வினா போட்டி, பாரதி கலா பவன் (பி.கே.பி) பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி --- வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.
அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பாரதி கலா பவன் பள்ளியில், வினாடி --- வினா போட்டி நடந்தது. தகுதிச் சுற்றில், 135 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'டி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற மாணவிகள் வர்ஷினி மற்றும் சாந்தினி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டன.
பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் ரங்கநாயகி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜூலி, விஜயபிரபா, ஆசிரியர்கள் மகாலட்சுமி மற்றும் ராதா ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
பயனுள்ள 'பட்டம்' இதழ் பள்ளி முதல்வர் ரங்க நாயகி கூறுகையில், 'தினமலர் -- பட்டம்' இதழ் மாணவர்களின் பொது அறிவு திறனை வளர்க்கிறது. மாணவர்கள் இதை தொடர்ந்து வாசிப்பதால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கிறது. கணிதம் சார்ந்த தகவல்களால் கூடுதல் திறன் மேம்படுகிறது. அன்றாட நிகழ்வுகளை எளிதில் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
அறிவியல் மற்றும் வரலாற்று தகவல்களை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அனைவருக்கும் பயனுள்ளதாக 'பட்டம்' இதழ் இருக்கிறது.

