sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்!

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்!

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்!

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்!


ADDED : அக் 15, 2024 10:14 PM

Google News

ADDED : அக் 15, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை, பட்டம் இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும். இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், மெகா வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.

பள்ளியில் நேற்று நடந்த போட்டியில், 132 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது. மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'சி' அணியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்கள் தன்வந்த், தன்சிர் ரோஷன் ஆகியோர் வென்றனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி செயலாளர் உமா மகேஸ்வரி, முதல்வர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர்.

இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

விரும்பி படிக்கிறோம்

தன்சிர் ரோஷன்: 'பட்டம்' இதழில், கணிதம், அறிவியல் என அனைத்து விதமான புதிய தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. பள்ளியில் தினமும் 'பட்டம்' படிப்பதால், பொது அறிவும், வாசிப்பு திறனும் மேம்படுகிறது. இது, பாடங்கள் படிப்பதற்கும் கைகொடுக்கிறது. இதனால், விரும்பி படிக்கும் இதழாக 'பட்டம்' உள்ளது. இறுதி போட்டியில் வெல்வதை இலக்காக கொண்டுள்ளேன்.








      Dinamalar
      Follow us