/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; பரிசு பெறும் உத்வேகத்துடன் மாணவர்கள் ஆர்வம்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; பரிசு பெறும் உத்வேகத்துடன் மாணவர்கள் ஆர்வம்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; பரிசு பெறும் உத்வேகத்துடன் மாணவர்கள் ஆர்வம்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; பரிசு பெறும் உத்வேகத்துடன் மாணவர்கள் ஆர்வம்
ADDED : அக் 23, 2024 05:30 AM

கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டியில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டுவருகிறது. பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நேற்று காரமடை, வித்ய விகாஸ் சர்வதேச பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 114 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'எப்' அணியை சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவர் ராகவ், ஏழாம் வகுப்பு மாணவர் மெரின் வர்கீஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் விஜயலட்சுமி ஆகியோர் பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் உமாமகேஸ்வரி, உஷாவந்தனா, தேன்மொழி, மரியசிந்தியா, ஞானஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
* வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 100 பேர் பொது அறிவுத்தேர்வு எழுதினர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
ஆர்வமுடன் பதிலளித்த, 'டி' அணியை சேர்ந்த பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் இனியன், தரணீஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி நிர்வாக இயக்குனர்கள் ராஜூ, அழகர்சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். முதல்வர் அனுராதா, ஆசிரியர் அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.