sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்

/

 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்

 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்

 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்


ADDED : நவ 18, 2025 04:35 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சுதந்திரா மேல்நிலைப்பள்ளி, ஐன்ஸ்டீன் பப்ளிக் பள்ளி மற்றும் யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர்களின், தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.

படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

சுதந்திரா மேல்நிலைப்பள்ளி அத்திப்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 190 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது.

அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அபி கார்த்திக் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி திவ்யா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் சுந்தரேஸ்வரன், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

ஐன்ஸ்டீன் பப்ளிக் பள்ளி அத்திப்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 50 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'சி' அணி முதலிடம் பெற்றது.

அந்த அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஜெய்சாந்த் பாரதி மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தாளாளர் சங்கீதா, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 40 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'பி' அணி முதலிடம் பெற்றது.

அந்த அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அஷ்வந்த் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி ஹர்ஷினி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் ருக்மணி, துணை முதல்வர் சுருதி உள்ளிட்டோர் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

கிப்ட் ஸ்பான்சர்கள் 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.






      Dinamalar
      Follow us