/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' செய்தி எதிரொலி: சாலையில் சரிந்த மின் கம்பம் மாற்றம்
/
'தினமலர்' செய்தி எதிரொலி: சாலையில் சரிந்த மின் கம்பம் மாற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி: சாலையில் சரிந்த மின் கம்பம் மாற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி: சாலையில் சரிந்த மின் கம்பம் மாற்றம்
ADDED : நவ 20, 2025 02:20 AM

வால்பாறை: வால்பாறையில் சாலையில் சரிந்த மின் கம்பம், 'தினமலர்' செய்தி எதிரொலியால் மாற்றப்பட்டது.
வால்பாறை நகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் (பொதுப்பணித்துறை குடியிருப்பு எதிரில்) அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் சரிந்த நிலையில் இருந்தது.
எந்த நேரத்திலும் சாலையில் சரிந்து விழும் நிலையில் இருந்ததால், வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர். மின்கம்பத்தால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக மின் கம்பத்தை, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சரிந்த நிலையில் இருந்த மின் கம்பத்தை, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மாற்றியுள்ளனர். 'தினமலர்' செய்தி எதிரொலியால் மின் கம்பம் மாற்றப்பட்டதையடுத்து, உள்ளூர் மக்களும், வாகன ஓட்டுனர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

