/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
ADDED : அக் 08, 2024 11:32 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 52 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சொக்கனூர் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி தலைவர் கூறுகையில், ''சொக்கனூர் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் பலர் முத்துக்கவுண்டனூர் அரசு பள்ளியில் படிக்கின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள சைக்கிள், மாணவர்கள் உயர்கல்வி கற்க உரிய நேரத்திற்கு வந்து செல்ல உதவும். பஸ் வசதியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியதில்லை இல்லை,'' என்றார்.