/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்
/
பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்
பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்
பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 19, 2024 11:44 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, மூன்றாம் பருவத்துக்கான பாட குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக, பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. இதில், 6, 7 ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும் உள்ளன.
இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு வினியோகிக்கும் வகையில், நேற்று முதல், இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன. இப்பணி, கல்வி மாவட்ட அலுவலர் பானுமதி மேற்பார்வையில் நடைபெற்றது.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87 பள்ளிகள் உள்ளன.
அதில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, 17,800 பேருக்கு விலையில்லா பாட குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும் இவை வழங்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.