sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்

/

பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்

பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்

பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள்; வினியோகிக்கும் பணி துவக்கம்


ADDED : டிச 19, 2024 11:44 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.

இதை தொடர்ந்து, மூன்றாம் பருவத்துக்கான பாட குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக, பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. இதில், 6, 7 ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும் உள்ளன.

இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு வினியோகிக்கும் வகையில், நேற்று முதல், இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன. இப்பணி, கல்வி மாவட்ட அலுவலர் பானுமதி மேற்பார்வையில் நடைபெற்றது.

கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87 பள்ளிகள் உள்ளன.

அதில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, 17,800 பேருக்கு விலையில்லா பாட குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும் இவை வழங்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us