/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்
ADDED : ஜூலை 31, 2025 10:06 PM
கோவை; மாவட்ட அளவிலான ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என மாவட்ட மற்றும் மாநில வீரர்கள் பங்கேற்றனர். 'லீக்' மற்றும் 'நாக் அவுட்'களுக்குப் பிறகு வீரர் ஸ்ரீநிவி முதல் அரையிறுதியில் வீரர் செந்தில்குமாரனை, 11-9, 11-8, 11-8 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.
இரண்டாவது அரையிறுதியில் வீரர் சங்கர், காயம் அடைந்ததால் வீரர் நிச்சித் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் வீரர் ஸ்ரீநிவி, 11-8, 11-6, 11-7 என்ற புள்ளிகளில் நிச்சித்தை வீழ்த்தி முதல் பரிசை வென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.