sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளம் பாயும் பவானி ஆற்றில் குளிக்காதீங்க! எச்சரிக்கை விடுக்கிறது போலீஸ்!

/

வெள்ளம் பாயும் பவானி ஆற்றில் குளிக்காதீங்க! எச்சரிக்கை விடுக்கிறது போலீஸ்!

வெள்ளம் பாயும் பவானி ஆற்றில் குளிக்காதீங்க! எச்சரிக்கை விடுக்கிறது போலீஸ்!

வெள்ளம் பாயும் பவானி ஆற்றில் குளிக்காதீங்க! எச்சரிக்கை விடுக்கிறது போலீஸ்!


ADDED : ஏப் 13, 2024 10:42 PM

Google News

ADDED : ஏப் 13, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;வறண்டு கிடந்த பவானி ஆற்றில், நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, ஆற்றுக்கு குளிக்க வருவோரை தடுக்கும் விதமாக, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் பலரும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்து, மகிழ வருகின்றனர். பவானி ஆற்றில் பில்லூர் அணை, பம்பிங் ஹவுஸ்களில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடும் போது, தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

அப்போது பவானி ஆற்றில் குளிப்பவர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மதுபோதையிலும் சிலர் குளிக்கின்றனர். பவானி ஆற்றில் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க, லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். எனினும், போலீசார் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ரோந்து செல்லும் போது, அங்கு அத்துமீறி குளிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, பவானி ஆறு வறண்டு காட்சியளித்த நிலையில், அத்துமீறி குளிக்க வருபவர்கள் கூட, தண்ணீர் இல்லாததால் திரும்பி சென்றனர்.

இதனிடையே, இரண்டு நாட்களாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பலரும் பவானி ஆற்றில் குளிக்க படையெடுத்து வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது:

பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என, வெள்ளிப்பாளையம் பாயின்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன், தூாரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங்க், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்தூர் என 19 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் என யாரும் குளிக்கக்கூடாது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இங்கு அத்துமீறி குளிப்பவர்களை, எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றோம். பவானி ஆற்றில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us