sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மலைப்பாதையில் வரையாடுகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

/

மலைப்பாதையில் வரையாடுகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

மலைப்பாதையில் வரையாடுகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

மலைப்பாதையில் வரையாடுகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை


ADDED : செப் 30, 2024 06:01 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை,: வால்பாறை மலைப்பாதையில் கொண்டைஊசி வளைவுகளிடையே வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இது தவிர வரையாடு, சிங்கவால்குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை மலைப்பகுதியில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன. மாநில வனவிலங்கான வரையாடுகள் ஆபத்தை உணராமல், ரோட்டில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். ஆழியாறு - அட்டகட்டி இடையே கொண்டைஊசி வளைவுகளுக்கு மத்தியில் வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டா எடுப்பதோ, செல்பி எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us