/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
/
குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
ADDED : மார் 05, 2025 10:24 PM

- நிருபர் குழு -
உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், பஸ் ஸ்டாண்டுக்கு தான் வருகின்றனர். அங்கு வசதிகள் இல்லாவிட்டால் மக்களின் பாடு திண்டாட்டமாக இருக்கும்.
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் காட்சிப்பொருளாக உள்ளது. பின்பகுதியில் குப்பையை குவித்துள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், மக்கள் நின்றபடியும், படிக்கட்டுகளில் அமர்ந்தும் காத்திருக்கும் நிலை உள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனங்கள், பஸ் ஸ்டாண்டுக்குள்ளே ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் நிறுத்தம் செய்யும் பகுதியிலும் வாகனங்களை நிறுத்துவதால், பஸ்கள் நிறுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் சுரங்க பாதையில், சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மேலும், சுகாதாரமின்றியும், பாதுகாப்பு இன்றியும் உள்ளதால், மக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்று, நகராட்சி நிர்வாகமும், நகரத்தின் சுகாதாரமும் பஸ் ஸ்டாண்டை பார்த்தாலே புரிந்து விடும். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட்களை சுகாதாரமாகவும், துாய்மையாகவும் பராமரித்து, அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை, நகராட்சிக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
உடுமலை
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, கோவை, திருப்பூர், பழநி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களுக்கும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்துகின்றனர். ஆனால், பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லை.
கோவை, பழநி, வால்பாறை, மூணாறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில், பயணியர் அமர இருக்கை இல்லாமலும், இருக்கும் இருக்கைகள் உடைந்தும், சுகாதார கேடுகளுடன் காணப்படுகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அலட்சியமாக இருப்பதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திலுள்ள கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. தற்காலிக கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகள் அதிகளவில் இருப்பதால், பஸ் ஸ்டாண்ட் வளாகம், கடை வீதி போன்று காணப்படுகிறது.
ஒரே கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. குடிநீர் வசதியும் இல்லை; இருக்கும் குடிநீர் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது.
கடைகளிலிருந்து, உணவுக்கழிவுகள், எச்சில் இலைகள் மற்றும் கழிவு நீர் நேரடியாக, பஸ் ஸ்டாண்டிற்குள் வெளியேற்றப்படுவதால், கழிவு நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.