/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவருக்கு 'போக்சோ' வழக்கில் 20 ஆண்டு சிறை
/
டிரைவருக்கு 'போக்சோ' வழக்கில் 20 ஆண்டு சிறை
ADDED : செப் 19, 2025 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில், போக்சோ வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
கோவை அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி,62; ஆட்டோ டிரைவர். இவர், 8 வயது பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால், 2022ல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட குப்புசாமிக்கு, 20 ஆண்டு சிறை, 42,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.